ஏற்காடு: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார். தனக்கு ராசியான அகாவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் முதல்வர் பிரச்சாரத்தை துவக்கினார்.