பூந்தமல்லி: வளசரவாக்கம், தேவிகுப்பம் பிரதான சாலை, ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (58). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். கடந்த வாரம் இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது இவரது வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சக்கரபாணி நகரில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன் (எ) ராஜன் (43) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி திவாகர் (எ) தருன் (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 85 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.