பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை இலங்கை அகதிகள் 2 பேர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம், தேவிகுப்பம் பிரதான சாலை, ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (58). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். கடந்த வாரம்  இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு  திரும்பியபோது இவரது வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சக்கரபாணி நகரில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன் (எ) ராஜன் (43) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி திவாகர் (எ) தருன் (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 85 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: பிடிபட்ட இருவரும் இலங்கை தமிழர்கள். மதுரையில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தங்கி வசித்து வந்தனர். இலங்கைக்கு கள்ளதோணியில் கள்ளநோட்டு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இருவரும் சேர்ந்து மதுரவாயல், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: