கடலூர் : கடலூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ 3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ 3.25 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.