சூரத்: பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிஎச்டி ஆய்வு படிப்பை சூரத் மாணவர் நிறைவு செய்துள்ளார். வீர நர்மதா தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்து ஆராய்ச்சி படிப்பை தொடங்கிய மெகுல் சோக்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ பண்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவருக்கும் நாட்டை விட்டு ஓடிய வைரவியாபாரி மெகுல் சோக்சிக்கும் பெயரை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2010-ம் ஆண்டு சோக் ஷி தனது ஆய்வு படிப்பை தொடங்கியிருந்தார்.