25 மக்களவை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் கடந்த 2014ல் 23 எம்.பி.க்களை பெற்ற பாஜ. இந்தமுறையும் மொத்தமாக அள்ளிவிட துடிக்கிறது. ஆனால், கடந்த 5 ஆண்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அதற்கு அணைபோடுகிறது. அப்போது ராஜஸ்தானில் பாஜ ஆட்சி, இப்போது நடப்பதோ காங்கிரஸ் ஆட்சி. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் ஆட்சியை பறிகொடுத்தது பா.ஜ. இப்போது 5 ஆண்டுகால மோடி அரசுக்கு எதிரான மனோநிலையில் மக்கள் உள்ளதால், எப்படியும் இந்தமுறை பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டிவருகிறது. இந்த நிலையில் சிட்டிங் எம்.பி.க்களிலும் பாதி பேருக்கு சீட் நஹி என்று பாஜ கட்சி மேலிடம் திடீர் முடிவு எடுத்துள்ளது.