தாம்பரம் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எழுப்பிய கேள்விக்கு, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலிலும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் கால நேரத்தின்படி நடந்து வருவதாக அவர் தகவல் அளித்துள்ளார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 11 பேர் பெண்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அதேபோல், கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
The post கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் 11 பெண் ஓதுவார்கள் நியமனம் : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் appeared first on Dinakaran.