திருச்சி: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது கண்டனத்திற்குரியது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.