லோக் அதாலத் மூலம் சென்னை சட்டபணிகள் ஆணைய குழு ரூ7 கோடி வசூல்

சென்னை:  சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு நடத்திய லோக் அதாலத்தில் ரூ7 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் கிடக்கும், வழக்குகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தேசிய சட்ட பணிகள் ஆணைய குழு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவில் நீதிபதி ஜெயந்தி உத்தரவின் பேரில் 6 லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து வழக்குகள், வங்கி கடன் என மொத்தம் 260 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 168 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ7 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 570 பணம் வசூல் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: