சூரத்: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் தமிழ்நாடு அணி விதர்பா அணியை 3விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது வெற்றியை பெற்றது. சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கின்றன. சூரத்தில் நேற்று நடைப்பெற்ற பி-பிரிவு லீக் சுற்று ஒன்றில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் களமிறங்கிய விதர்பா 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஜிதேஷ் சர்மா 27 ரன்களும், ரூபேஷ் ரத்தோட் 51 ரன்களும் எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் தன்வர் 3 விக்கெட்களும், கேப்டன் அஸ்வின்2 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், விக்னேஷ், சாய்கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களமிறங்கியது. கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் முரளி விஜய் பொறுப்பாக விளையாடினார்.