பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து குண்டுவீசிய நிலையில், நேற்று காலை விமானப்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்தில் எரிந்து சாம்பலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரின் பத்காம் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் விமானப்படையில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளது.