ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் பலியாகினர். காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.