லாகூர்: புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் மத்திய பிரதேசம், டெல்லி மாநில விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.250 ஆக உயர்ந்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது இருப்பது தெரியவந்தது. ெதாடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தக ரீதியான சில தடைகளையும், கூடுதல் வரிவிதிப்புகளையும் விதித்து மேல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வந்த மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் அதனை முழுவதுமாக சப்ளை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால், பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக சரிந்து, அங்கு தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டன.