மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா

டெல்லி: ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ரூபாலா மீண்டும் மன்னிப்பு கோரினார். ராஜ்புத்திர ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்ததாக ரூபாலா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சரும் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாளருமான ரூபாலா பேச்சுக்கு ராஜ்புத் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அமைச்சர் ரூபாலாவின் மன்னிப்பை ராஜ்புத்திர சமூகத்தினர் ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் மன்னிப்பு கோரினார்.

The post மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா appeared first on Dinakaran.

Related Stories: