இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த அனுஜ் தாபன் மற்றும் சோனு சுபாஷ் ஆகியோர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது நபரை மும்பை காவல்துறையினர் ராஜஸ்தானில் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5வது நபர் ரபிக் சவுத்ரி என்பது அடையாளம் காணப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய இருவருக்கும் ரபிக் சவுத்ரி பணம் கொடுத்து உதவியதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை வீடியோ எடுத்து அதனை பிஷ்னோய்க்கு அனுப்பியதாகவும் போலீசார் கூறினர். தற்போது முகமது சவுத்ரியை வரும் 13 வரை குற்றப் பிரிவு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்; 5வது குற்றவாளி ராஜஸ்தானில் கைது: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.