இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டை வீசி ஒட்டுமொத்தமாக அழித்து விடும்: முன்னாள் அதிபர் முஷரப்

அபுதாபி: இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டை வீசி ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார். பேட்டி அளித்த அவர் பாகிஸ்தான்  “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டது என்று அபுதாபியில் பாகிஸ்தானை சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வருங்காலத்தில் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது எனவும் கூறினார். அப்படி ஒருவேளை நாம் இந்தியாவை ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள் என தெரிவித்தார். மேலும் இந்தியா மீது ஒரு அணுகுண்டை நாம் வீசி தாக்கினால், பதிலுக்கு 20 அணுகுண்டை நம் மீது வீசி இந்தியா நிர்மூலமாக்கி விடும் என்று அவர் கூறினார்.

இந்தியாவை தாக்க ஒரேயொரு வழிதான் உள்ளது எனவும் கூறினார். நாம் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை அந்நாடு மீது வீச வேண்டும் எனவும் அப்போது தான் அவர்களால் நம்மை 20 அணு ஆயுதங்கள் மூலம் தாக்க முடியாது எனவும் கூறினார். அப்படி பாகிஸ்தான் அரசால் ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களை இந்தியாவை நோக்கி செலுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்புனார். பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது நாடு திரும்ப தயார் என்றும் முஷரப் குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: