துபாய்: பிரபல டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ மகளிர் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் மோதிய பென்சிக் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த குவித்தோவா, அதிரடியாக விளையாடி பென்சிக்கின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். குவித்தோவா 2வது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட்டில் பென்சிக் முழு திறமையையும் வெளிப்படுத்தி 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.