காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதி பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் அருகேயுள்ள வார்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படைவீரர்களும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த  துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ெகால்லப்பட்ட தீவிரவாதிகள்  யார் என அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், இருதரப்புக்கும் நள்ளிரவு வரையில் சண்டை நீடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: