இந்தியா புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசை விமர்சித்த மாஜி பஞ். தலைவர் கைது Feb 21, 2019 மேஜ் பிங் அரசு தாக்குதல் புல்வாமா அகமத்நகர்: மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள விஷ்பூர் கிராமத்தில் புல்வாமாவில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சயத் ஜப்பார் அமீர் மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சயத் ஜப்பார் அமீரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்
பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?