ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கோணார்காடு பகுதியில் வயதான தம்பதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபர்களால் அரிவாளால் வெட்டியும், கம்பியால் தாக்கியும் கணவர் துரைசாமி, மனைவி துளசிமணி கொலை செய்யப்பட்டனர். வயதான தம்பதி கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.