புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி 6-வது நாளாக தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி 6-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 36 முக்கிய கோப்புகளில் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என முதல்வர் நாராயணசாமி புகார் தெவித்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: