போதை ஆசாமி ஓட்டிய கார் மோதி பெண் படுகாயம்: 3 வாகனங்கள் சேதம்

அண்ணாநகர்: வானகரம் அடுத்த நொளம்பூர் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (28). சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அயனாவரத்தில் இருந்து ஐசிஎப் நோக்கி குடிபோதையில் தனது காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற 3 கார்கள் மீது வேகமாக மோதியது. மேலும், சாலையில் நடந்து சென்ற ஒரு இளம்பெண் மீதும் மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விரட்டி சென்று, ஐசிஎப் பேருந்து நிலையம் அருகே காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் குடிபோதையில் இருந்த கார்த்திகேயனுக்கு தர்மஅடி கொடுத்து, ஐசிஎப் போலீசில் ஒப்படைத்தனர். அவரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் கார் ஓட்டிய கார்த்திகேயனை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: