திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முகநூல் பக்கத்தில் இணைந்துள்ள பெண்கள் குழுவாக செல்ல திட்டமிட்டிருப்பதால் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. 2 நாட்களாக பெண்கள் யாரும் தரிசனம் செய்யவில்லை. சபரிமலையில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம்.