சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் நேற்று பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் கிராமத்தில் சைவ, வைணவ வரலாற்றுடன் இணைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் திருக்கோவில் உள்ளது. சிறப்பு மிகு கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்பாளுடன் சுவாமி திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது.