கலசபாக்கம்: துரிஞ்சாபுரம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் கிராமத்தில் ஈசான்ய மடம் அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேப்பமரங்கள் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு மரத்தில் இருந்து திடீரென பால் வடிய தொடங்கியது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் சிலர் வேப்பமரத்தில் பால் வடிவதை கண்டு ஆச்சரித்துடன் பார்த்தனர்.