சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், அவர் அந்த அறிக்கையை நேற்று வெளியிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை. அஜித் ரசிகர்கள், திருப்பூரில் பாஜவில் சேர்ந்த பின்பு இந்த அறிக்கை வந்துள்ளது. அவரது ரசிகர்கள் ஒரு இயக்கத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியுமா, முடியாதா என்பதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன். அவருடைய அறிக்கையால் பாஜவை விமர்சனம் செய்கிறார்கள். பாஜ எது செய்தாலும் விமர்சனம்தான்.