ஆலந்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் கைவரிசையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் பிடிபட்டார். சென்னை யானைக்கவுனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பூக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், யானைக்கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்த சோனி என்ற சோனைராஜ் (39) என்பதும், ஆவடி, அம்பத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை நொட்டமிட்டு பல இடங்களில் 30க்கும் மேற்பட்ட சவரன் நகை கொள்ளையடித்தது தெரியவந்தது.