மங்களூரு: கர்நாடகாவின் நடுகத்ேத பகுதியில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத் கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு சுமார் 26 பேர் படகு ஒன்றில் வந்து கொண்டிருந்தனர். இவர்களின் படகு நடுகடலில் வந்தபோது பாரம் தாங்க முடியாமல் நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். அனைவரும் தங்களை காப்பாற்ற கோரி கூச்சலிட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கூக்குரல் கேட்டது. இதை பாரத்த மற்ற படகில் வந்தவர்கள் உடனே போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.