திருநெல்வேலி: முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன் கோவிலில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையையொட்டி நெல்லையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.