மும்பை: திரைப்படமும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்தியதிரைப்பட அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் பிரச்னைகள், அதற்கான தீர்வை தெரிவிப்பவையாக தற்கால திரைப்படங்கள் உள்ளன என்றும் திருட்டுவிசிடி போன்றவற்றை கட்டுப்படுத்த திரைப்பட சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.