மேட்டூர் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மேலும் ஒரு அலகில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்  கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, முதல்  பிரிவில் 4வது அலகு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முதலாவது அலகில் மின்தேவை குறைவு   என்று கூறி உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதனால், முதல்பிரிவில் 420 மெகாவாட் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: