கன்னியாகுமரி : கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தும், கையை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி கார்த்திகா (25). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும்போது நடுபாளையம் பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சதீஷ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். வீட்டில் இருந்து உறவினர்களை மறைத்து இருவரும் சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் எங்காவது சென்றுவிடலாம் என முடிவு செய்தனர். இதன்படி கடந்த 3ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று சுற்றினர். அவர்கள் செல்லும் இடத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து இரவு தங்கினர். இந்த நிைலயில் கார்த்திகாவை காணவில்லை என கோபிசெட்டிபாளையும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இளம் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடந்த 9ம் தேதி மதுரைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். அதன்பின் கணவன் -மனைவியாக வலம் வந்தனர். பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து காவல் நிலையம் அருகில் உள்ள லட்ஜில் அறை எடுத்து தங்கினர்.