கன்னியாகுமரியில் இன்று காலை பரபரப்பு : லாட்ஜில் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தும், கையை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி கார்த்திகா (25). அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும்போது நடுபாளையம் பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சதீஷ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். வீட்டில் இருந்து உறவினர்களை மறைத்து இருவரும் சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் எங்காவது சென்றுவிடலாம் என முடிவு செய்தனர். இதன்படி கடந்த 3ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று சுற்றினர். அவர்கள் செல்லும் இடத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து இரவு தங்கினர். இந்த நிைலயில் கார்த்திகாவை காணவில்லை என கோபிசெட்டிபாளையும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இளம் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடந்த 9ம் தேதி மதுரைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். அதன்பின் கணவன் -மனைவியாக வலம் வந்தனர். பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து காவல் நிலையம் அருகில் உள்ள லட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

தற்போது கன்னியாகுமரியில் சீசன் காலம் என்பதால் இவர்கள் தினமும் காலையில் வெளியே சென்றுவிட்டு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவில் மீண்டும் அறைக்கு வருவர். இந்த நிலையில் இன்று காலை அவர்கள் தங்கி இருந்த அறை நீண்ட ேநரமாக திறக்கவில்லை. லாட்ஜ் ஊழியர் சென்று கதவை தட்டியபோதும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கார்த்திகா இறந்து கிடந்தார். சதீஷ் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், நேற்று சூரிய மறைவுக்கு பின் அறைக்கு வந்த அவர்கள் விஷம் குடித்தள்ளனர். பின்னர் தங்கள் கையை கத்தியால் அறுத்துவிட்டு பெட்டில் படுத்துள்ளனர். இதில் கார்த்திகா இறந்துவிட்டார். சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து இருவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: