சென்னை: கால்டாக்சி சேவையின் மூலம் 36,148 பேர் பலனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் வாடகை கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவைகள் தொடங்கப்பட்டது. கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், அசோக்நகர், கோயம்பேடு உள்ளிட்ட 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், வடபழனி, டி.எம்.எஸ் உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் கால்டாக்சி சேவையும் செயல்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 12ம் தேதி இதற்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டது. இதனால், கடந்த 2018 நவம்பர் மாதம் 33 ஆயிரத்து 866 பேர் இந்த சேவையில் பயனடைந்தனர்.