திருவனந்தபுரம்: சபரிமலையில் இரவு நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 30ம் தேதி மாலை ேகாயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வந்தனர்.