புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சஜ்ஜன் குமார் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமாரை டிசம்பர் 31-ம் தேதிக்குள் சரணடையுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் அவர் சரணடைந்தார். திகார் சிறையில் அடைக்க சஜ்ஜன் குமார் தரப்பு கேட்டுக் கொண்டதை நிராகரித்த நீதிபதி அவரை மன்டோலி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.