புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக காங்கிரசின் கமல்நாத் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘இம்மாநில தொழிலாளர்களை 70 சதவீதத்திற்கு சேர்க்கும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீட்டு சலுகை நிதி வழங்கப்படும். இங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை உபி, பீகார் தொழிலாளர்கள் பறிக்கின்றனர். அவர்களுக்கு உள்ளூர் தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது’’ என்றார்.இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பாஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘‘கமல்நாத் பிரித்தாளும் அரசியலை ஊக்குவிக்கிறார். பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறார்.