அவுரங்காபாத்: அவுரங்காபாத்தில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் மர்ம ஆசாமியால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் தேஷ்முக். இவரது மகள் அகான்ஷா (21). இவர் அவுரங்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தி மிஷன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் உள்ள ஒரு அறையில் இவர் தனியாக தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அகான்ஷாவின் அறைக்கதவு திறந்து கிடந்தது. விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது, உள்ளே அகான்ஷா மூர்ச்சையின்றி கீழே கிடந்தார். இதுபற்றி ஊழியர்கள் வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.