சென்னை: சென்னை அபிராமபுரம் பீமன் கார்டன் பகுதியில் உள்ள பிரபல ரெஸ்டாரண்டில் மேகாலயா மாநிலத்தை ேசர்ந்த பையா உன்லாங்கு(20) என்ற பெண் பணியாற்றி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து ரெஸ்டாரண்ட் பெண் வெளியே வந்து வீட்டிற்கு செல்ல தனது செல்போனில் கால் டாக்சி புக் செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆட்டோ ஒன்று வேகமாக வந்து பையா உன்லாங்குவை அணைத்தது போல ஆட்டோவை நிறுத்தினர். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டோவில் இருந்த நபர்கள் மயக்க ஸ்பிரே அடித்தனர். இதில் சற்று நேரத்தில் வடமாநில பெண் மயங்கி சாலையிலேயே விழுந்தார்.
உடனே 3 பேரும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஆட்ேடாவை வழிமறித்து 3 நபர்களையும் அடித்து உதைத்தனர்.அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து 3 வாலிபர்களையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தேனாம்பேட்டையை ேசர்ந்த லோகநாதன்(21), மணிகண்டன்(19), லோகேஷ்(18) என தெரியவந்தது. இவர்கள் மீது கோட்டூர்புரம், கோடம்பாக்கம், பாண்டிபஜார் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மயக்க ஸ்பிரே, செல்போன் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி