பிரதமர் மோடிக்கு அடுத்தடுத்த சறுக்கல் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா ராஜினாமா

புதுடெல்லி: சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் கட்டுரையாளருமான சுர்ஜித் பல்லா பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் நிதி ஆயோக் உறுப்பினர் தேப்ராய் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.  இந்தக் குழுவில் பொருளாதார நிபுணர்கள் ரத்தன் ராய், அஸிமா கோயல், ஷாமீகா  ரவி மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் கட்டுரையாளரான சுர்ஜித் பல்லா ஆகியோர் பகுதி நேர உறுப்பினராக இருந்து வந்தனர்.

இந்நிலையில் தனது உறுப்பினர் பதவியை சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுர்ஜித் தனது டிவிட்டர் பதிவில், “பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினர் பதவியில் இருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி ராஜினாமா செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: