சென்னை: நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23 இன்ஜினியரிங் கல்லூரிகளில் நவம்பர் 22,23,24ம் தேதிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். கஜா புயல் பாதிப்பால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசியதில் செல்போன் டவர்கள் சாய்ந்தது. மின்கம்பிகள், சாலைகளில் மரங்கள் விழுந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகளில் நவம்பர் 22,23,24ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.