கோவை : கோவை அருகே 2 மகள்களை கழுத்தறுத்துக் கொன்று விட்டு தந்தை தப்பியோடியுள்ளார். குடும்பத் தகராறில் 10ம் வகுப்பு படித்து வந்த ஹேமவர்ஷினி மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீஜாவை அவர்களது தந்தையான பத்மநாபன் என்பவர் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.