கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் இன்று ரத யாத்திரை நடத்த பாஜ ஏற்பாடு செய்து வந்தது. கூச்பிகாரில் தொடங்கும் யாத்திரைக்கு பாஜ தலைவர் அமித்ஷா தலைமை தாங்க இருந்தார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீஸ் மறுத்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜ வழக்கு தொடர்ந்தது. இது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசின் வக்கீல், `‘அமித்ஷாவின் யாத்திரையால் மதமோதல் ஏற்படும் ஆபத்து இருப்பதால், போலீஸ் அனுமதி மறுத்துள்ளது’’ என்றார்.