கரூர்: தை மாதம் பொங்கல் பண்டிகையின் போது, மக்களால் விரும்பி வாங்கப்படும் பொருட்களில் கரும்பும் ஒன்று. பொங்கலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில் இப்போதே திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக கரும்புகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கரூரில் ஆசாத் சாலை, மார்க்கெட், ஜவஹர் பஜார், சர்ச் கார்னர் ஆகிய பகுதிகளில் கரும்பு வியாபாரம் நடந்து வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு கடைவீதியில் கடந்த இரண்டு நாட்களாக கரும்பு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.