திருத்துறைப்பூண்டி: கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தார்பாய் கேட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெரியகொத்தமங்கலம் கிராமத்தில் கஜா புயலால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரையை தற்காலிமாக சரி செய்யும் வகையில் தார்பாய் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.