திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு திருமலைக்கு வந்தார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முகேஷ் அம்பானி ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இதனையடுத்து இன்று காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் முகேஷ் அம்பனி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.