டெல்லி : ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் எந்த தவறும் நிகழவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டு கண்காணிப்பு ஆணையம் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் அனுமதி வழங்கியது என்று தெரிவித்த அவர், தன் மீது சிபிஐ தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த ஆதாரமும் சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.