தூத்துக்குடி: தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் சாமி. ஓய்வுபெற்ற அரசு டாக்டர். இவரது மகள் சோபியா. கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் வந்தார். அதே விமானத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசையும் வந்துள்ளார். விமானத்திலிருந்து இறங்கும்போது மாணவி சோபியா, பாசிச பாஜ அரசு ஒழிக என கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து தமிழிசை தெரிவித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக சோபியாவின் தந்தை சாமி புதுக்கோட்டை போலீசில் அளித்துள்ள புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.