சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ஆட்டோவில் சென்ற சுவிட்சர்லாந்து நாட்டு பயணியிடம் கைப்பை பறிக்கப்பட்டது. பயணி மார்சலின் கரோலின் கைப்பையில் 3,500 அமெரிக்க டாலர், ரூ.5,000 இந்திய பணம் இருந்துள்ளன. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கைப்பையை பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர்.