சென்னை: தமிழக அரசு சுயமரியாதையை இழந்து மத்திய அரசிடம் சரணடைந்துள்ளதாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நேற்று சென்னையில் பேட்டி அளித்தார். பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது: வட நாட்டு தலைவர்களின் மற்றும் கட்சிகளின் ஆதிக்கத்தால், தென்னிந்திய மக்கள் தொடர்ந்து இரண்டாம்பட்ச குடிமக்களாக பார்க்கப்படுகிறார்கள். திராவிட நாடு கோரிக்கை இப்போது இல்லை. ஆனால், திராவிட கலாச்சாரம், மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும். அவைகள் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது. இதற்கு இந்திய ஆட்சி அதிகாரத்தில் தென்னிந்தியர்களின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி தொடங்கலாம்.