மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரய்யன் மறைவு : கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரய்யன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களின் தலைவர் வீரய்யன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.  மாநிலம் முழுவதும் கட்சிக்கொடிகளை மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: