சென்னை: சென்னையில் ஒரே நாளில் 90 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணடியைச் சேர்ந்த சபீர் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ளவர்கள வெறியூர் சென்றதையறிந்த மர்மநபர்கள திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் சென்ற சபீர் குடும்பத்தினர் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது 35 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.